Tuesday, November 3, 2015

வசியமுடன் சிரித்திடுதே ....!!!




விண்மீன்கள் கண்சிமிட்டி மின்னிக் கொஞ்சி 
***விளையாடும் இரவினிலே நாளும் வானில் !
வெண்பூக்கள் அந்தியிலே அவிழ்க்கும் மொட்டால்
***மென்வாசம் பரவிடுமே தென்றல் காற்றில் !
மண்டூகம் குரலோங்கக் கத்துஞ் சத்தம் 
***மழையடித்து விட்டதுமே கேட்கும் காதில் !
வண்ணத்துப் பூச்சிக்கு  மதுவைத் தந்து 
***வசியமுடன் சிரித்திடுதே  வண்ணப் பூவே ....!!


       ( எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் )

2 comments: