Tuesday, October 20, 2015

நெஞ்சம் நெகிழும் ...!!! ( அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் )

நீலமயில் வாகனனின் திருப்புகழைப் பாடிவந்தால் 
***நெகிழும் நெஞ்சம் !
மாலவனின் மருகனவன் மலர்த்தாளைப் பற்றிடிலோ 
***மயக்கம் தீரும் !
கோலவிழிக் குறமகளும் குறைதீர்க்க உடன்வருவாள் 
***கொழிக்கும் செல்வம் !
வேலவனின் அருள்கிட்ட மேதினியில் சிறப்புற்று 
***விளங்கும் வாழ்வே ! 

No comments:

Post a Comment