நெஞ்சம் நெகிழும் ...!!! ( அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் )
நீலமயில் வாகனனின் திருப்புகழைப் பாடிவந்தால்
***நெகிழும் நெஞ்சம் !
மாலவனின் மருகனவன் மலர்த்தாளைப் பற்றிடிலோ
***மயக்கம் தீரும் !
கோலவிழிக் குறமகளும் குறைதீர்க்க உடன்வருவாள்
***கொழிக்கும் செல்வம் !
வேலவனின் அருள்கிட்ட மேதினியில் சிறப்புற்று
***விளங்கும் வாழ்வே !
No comments:
Post a Comment