Tuesday, October 27, 2015

தனிமையுணர்வை மாற்றினாள் ....!!



சன்ன லோர இருக்கையில் 
***சாய்ந்துக் கண்ணை மூடினாள்!
என்ன இந்த வாழ்வென
***எரிச்சல் கொண்டு வாடினாள்!

அன்புக் காட்டி மறுத்தவன் 
***அமைதி பறித்துப் போகவே 
சின்ன மனத்தில் வேதனை 
***சிறகு விரிக்க ஏங்கினாள்!

கன்னந் தழுவும் தென்றலால் 
***களைப்பு மெல்ல நீங்கினாள்!
புன்ன கையைத் தொலைத்தவள் 
***புதிதாய் மூச்சு வாங்கினாள்!

தன்கை என்று முதவிடும் 
***தவித்த நெஞ்சைத் தேற்றினாள்!
தன்னம் பிக்கைத் துணைவர
***தனிமை யுணர்வை மாற்றினாள்...!!!

No comments:

Post a Comment