Tuesday, October 13, 2015

வெட்கியேப் பூத்தனளே ....!!!



கண்களில் மின்னல் காந்தமாய்க் கவரக் 
***காதலில் விழுந்துவிட்டான் !
பெண்ணவள் அழகில் சொக்கியே அவனும்
***பித்தனாய் மாறிவிட்டான் !
எண்ணிலாப் பாக்கள் இனிமையாய் வடித்து 
***எண்ணமும் சொல்லிவிட்டான் !
வெண்மதி முகத்தாள் மெல்லிடைத் துவள 
***வெட்கியேப் பூத்தனளே !

     ( அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் )
      ( விளம் மா விளம் மா விளம் காய் )

No comments:

Post a Comment