Wednesday, September 30, 2015

புரிந்திடச் செய்யும் துயர் ...!!!



காந்த விழியால் கவர்ந்திடும் கன்னியின் 
கூந்தல் கலைந்ததேன் கூறு .

பூத்ததேன் நீலம் பொலிவானக் கண்களில் 
காத்திருப்பால் வந்தவினை யோ ? 

கலங்கும் விழியில் கவலையின் ரேகை 
நலமிலை யென்றே சொலும் . 

விரிந்தக் குழலும் வழியும் விழியும் 
புரிந்திடச் செய்யும் துயர் .

வருத்த முறைந்த வனிதை வதனம் 
மெருகு குறைந்து விடும் .

No comments:

Post a Comment