Thursday, September 28, 2017

மெட்டுக்குப் பாட்டு ...!! ( ராசாத்தி ஒன்ன )


தாலாட்டுப் பாடும் தாயான தாலே நெஞ்சத்தில் பூப்பூத்தது/
தாலாட்டுப் பாடும் தாயான தாலே நெஞ்சத்தில் பூப்பூத்தது/
தாலாட்டுப் பாடும் தாயான தாலே நெஞ்சத்தில் பூப்பூத்தது/
தாலாட்டுப் பாடும் தாயான தாலே நெஞ்சத்தில் பூப்பூத்தது/
அழும்பிள்ளை சத்தம் அதுதீர்க்கும் பித்தம் /
அம்மாவின் உள்ளம் பாடுது /
( தாலாட்டுப் பாடும் தாயான தாலே நெஞ்சத்தில் பூப்பூத்தது )

சரணம்:1
************
கன்னத்தினில் இச்இச்சென கொஞ்சித்தரும்  முத்தத்துளி/ 
தித்தித்திடும் அந்தக்கணம் தேன்தானம்மா/
கன்னத்தினில் இச்இச்சென கொஞ்சித்தரும்  முத்துத்துளி/ 
தித்தித்திடும் அந்தக்கணம் தேன்தானம்மா/
பிள்ளை மொழியோ பொங்கிப் பெருகும்/
அன்னை மனமோ அன்பில் உருகும்/
எந்தன் பழி தீர்க்கும் எழில் பொற்சித்திரம்/
ஊராரின் பேச்சில் உயிர்வாடிப் போனேன்/
வீட்டாரின் ஏச்சில் நிதம்ஏங்க லானேன்/
என்வாழ்வின் அர்த்தம் நீதான் செல்லம்/
தாலாட்டுப் பாடும் தாயான தாலே நெஞ்சத்தில் பூப்பூத்தது )

சரணம்: 2 
*************
கண்ணே உனைக் காணும் வரை கண்ணீர்த் துணை என்றே தினம்/
காலம் அது சென்ற வலி பாட்டில் வைப்பேன்/
கண்ணே உனைக் காணும் வரை கண்ணீர்த் துணை என்றே தினம்/
காலம் அது சென்ற வலி பாட்டில் வைப்பேன்/
சொந்தம் விரட்ட செத்துப் பிழைத்தேன்/ 
சொர்க்கம் தனையே காட்டப் பிறந்தாய்/
கர்ப்பத்திலே நான்தாங்கிய தங்கச்சிலை/
முன்னூறு நாளும் மூச்சாக நீயே/
வாழ்வேனே இன்னும் என்ராணி யோடு/ 
கண்மூடித் தூங்கு பாடல் கேட்டு/
தாலாட்டுப் பாடும் தாயான தாலே நெஞ்சத்தில் பூப்பூத்தது )

சியாமளா ராஜசேகர் 

No comments:

Post a Comment