Friday, September 15, 2017

வண்ணம் கொண்ட வெண்ணிலவே மெட்டில் ஒரு பாட்டு !

பொன்னாய் மின்னும் தேவதையே !
பொங்கும் அன்பைத் தாராயோ ?
பொன்னாய் மின்னும் தேவதையே !
பொங்கும் அன்பைத் தாராயோ ?

கண்ணிலே காந்தம் இல்லை 
காதல் மனம் ஈர்க்க வில்லை !
கண்ணிலே காந்தம் இல்லை 
காதல் மனம் ஈர்க்க வில்லை !

பொன்னாய் மின்னும் தேவதையே !
பொங்கும் அன்பைத் தாராயோ ?
பொன்னாய் மின்னும் தேவதையே !
பொங்கும் அன்பைத் தாராயோ ?

நெஞ்சத்தில் வீரம் இல்லை 
நேசத்தில் வேஷ மில்லை 
மஞ்சத்தில் தூக்க மில்லை 
மாலையும் பூக்க வில்லை !

நெஞ்சத்தில் வீரம் இல்லை 
நேசத்தில் வேஷ மில்லை 
மஞ்சத்தில் தூக்க மில்லை 
மாலையும் பூக்க வில்லை !

தூது சென்று பேசிவர
தூயவன் யாரு மில்லை !
சுட்டுவிடும் காரணத்தால் 
சூரியனும் போகவில்லை 
துள்ளித் துள்ளி நீயாட 
வானவில்லும் வளைய வில்லை !

பொன்னாய் மின்னும் தேவதையே !
பொங்கும் அன்பைத் தாராயோ ?
பொன்னாய் மின்னும் தேவதையே !
பொங்கும் அன்பைத் தாராயோ ?

வானில் உந்தன் பேரெழுத 
மேகத்தை அனுப்பிவைத்தேன் !
வான மங்கை கண்ணீரில் 
மேகமும் கரைந்ததடி !

மின்னல் வெட்டும் வேளையிலும் 
மேல் நடுங்க வேர்த்திருப்பேன் !
கன்னல் மொழி கேட்கும் வரை 
காற்றைப் போல் நான் மிதப்பேன் !
மாரி வரம் தந்துவிட்டால் 
பூரிப்பில் பூத்திருப்பேன் !

பொன்னாய் மின்னும் தேவதையே !
பொங்கும் அன்பைத் தாராயோ ?
பொன்னாய் மின்னும் தேவதையே !
பொங்கும் அன்பைத் தாராயோ ?

பொன்னாய் மின்னும் தேவதையே !
பொங்கும் அன்பைத் தாராயோ ?
பொன்னாய் மின்னும் தேவதையே !
பொங்கும் அன்பைத் தாராயோ ?

சியாமளா ராஜசேகர் 

No comments:

Post a Comment