Wednesday, September 27, 2017

அழிவின்றிக் காப்போம் ...!!!


அலங்காரச் சிலையெனவே 
***அழகுமிளிர் மங்கையரின்
பலவண்ண அசைவுகளில் 
***பாதங்கள் பதிந்தாட 
சலங்கையொலி கொஞ்சலுடன்
***தரைமீது தாளமிட 
மலர்க்கூந்தல் சேர்ந்தாடும் 
***வளைந்தாடும் மெல்லிடைமேல் !

விழிபேசும் பாவனையும் 
***விரல்காட்டும் முத்திரையும்
மொழியின்றி உணரவைக்கும் 
***முகத்தினிலே நவரசமும் 
எழிலாகப் பூத்திருக்கும் 
***இதயத்தை இதமாக்கும் 
அழிவின்றிக் காத்திடுவோம் 
***அருங்கலையாம் பரதத்தை  !

சியாமளா ராஜசேகர் 

No comments:

Post a Comment