Thursday, September 28, 2017

பேதை நெஞ்சம் ...!!!


புன்னகையைத் தொலைத்துவிட்ட பேதை நெஞ்சம் 
       பொலிவிழந்த காரணத்தைச் சொல்ல அஞ்சும் !
தென்றலது தூக்கமின்றி உலவும் நேரம் 
     திங்களிலும் தீப்பிடிக்கும் உணர்வின் வேகம் !
கன்னத்தில் விழிபோடும் கண்ணீர்க் கோலம் 
     கவலைகளால் மனம்பட்ட காய மாகும் !
சென்றவனின் நினைவுகளோ இடியாய்த் தாக்கும் 
        சேரும்நாள் வருமென்ற கனவில் பூக்கும் !!

சியாமளா ராஜசேகர் 
     

No comments:

Post a Comment