புன்னகையைத் தொலைத்துவிட்ட பேதை நெஞ்சம்
பொலிவிழந்த காரணத்தைச் சொல்ல அஞ்சும் !
தென்றலது தூக்கமின்றி உலவும் நேரம்
திங்களிலும் தீப்பிடிக்கும் உணர்வின் வேகம் !
கன்னத்தில் விழிபோடும் கண்ணீர்க் கோலம்
கவலைகளால் மனம்பட்ட காய மாகும் !
சென்றவனின் நினைவுகளோ இடியாய்த் தாக்கும்
சேரும்நாள் வருமென்ற கனவில் பூக்கும் !!
சியாமளா ராஜசேகர்
No comments:
Post a Comment