Wednesday, September 13, 2017

அன்பால் வெல்வோம் !!

உழைத்துழைத்துத் தேய்ந்தாலும் ஓய்வெதற்கு கண்ணே?
***உள்ளத்தில் உறுதியுடன் உள்ளவரை வாழ்வோம்!
பிழைத்திடவும் வழியுண்டு பிணக்கின்றி என்றும்
***பெற்றெடுத்த பிள்ளையொடு பிரியமுடன் வாழ்வோம்!
மழைபோலக் கருணையுடன் மனங்குளிர வாழ்த்தி
***மகிழ்வுடனே பயிர்செய்து வளமாக வாழ்வோம்!
அழைப்புவந்த பின்னாலே அவ்வுலகு செல்வோம்
***அதுவரையில் பிரியாமல் அன்பாலே வெல்வோம்!
சியாமளா ராஜசேகர்

No comments:

Post a Comment