கொட்டித் தீர்த்த மழையினால்
***கொதித்துப் போன துள்ளமே !
கட்டு டைத்த ஏரியால்
***கலங்கிப் போச்சு நகரமே !
திட்ட மில்லாச் செய்கையால்
***தேடிக் கொண்டோம் அழிவையே
பட்ட பின்னே புரிந்தது
***பாடம் கற்றுக் கொடுத்தது !
ஏரி வழியை மறித்திடல்
***ஏற்பு டைய செய்கையோ ?
மாரி மீது பிழையிலை
***மக்கள் செய்த குற்றமே !
நேரில் கண்டக் காட்சியோ
***நெஞ்சை உலுக்கி விட்டது
பேரி ழப்பைக் கண்டதும்
***பேத லித்துப் போனது !
அரசின் மெத்தப் போக்கினால்
***அழிவு அதிக மானதே !
வரவுக் கென்ன செய்வது
***வாட்டம் மனதை அரித்ததே
கரங்கள் நீட்டும் உதவியால்
***கண்கள் பனித்து வடிந்ததே !
மரத்துப் போன நிலையிலும்
***மனிதம் மண்ணில் பூத்ததே !
கட்டுக் கட்டாய் இருப்பினும்
***காசு செல்ல வில்லையே !
கட்டுச் சாதம் வருமெனக்
***காத்தி ருப்பும் கொடுமையே !
விட்டு வந்தப் பொருளெலாம்
***வீணாய்ப் போன வேளையில்
சுட்ட நினைவு ஆறுமோ
***சுவடாய் நெஞ்சில் பதியுமோ ??
***கொதித்துப் போன துள்ளமே !
கட்டு டைத்த ஏரியால்
***கலங்கிப் போச்சு நகரமே !
திட்ட மில்லாச் செய்கையால்
***தேடிக் கொண்டோம் அழிவையே
பட்ட பின்னே புரிந்தது
***பாடம் கற்றுக் கொடுத்தது !
ஏரி வழியை மறித்திடல்
***ஏற்பு டைய செய்கையோ ?
மாரி மீது பிழையிலை
***மக்கள் செய்த குற்றமே !
நேரில் கண்டக் காட்சியோ
***நெஞ்சை உலுக்கி விட்டது
பேரி ழப்பைக் கண்டதும்
***பேத லித்துப் போனது !
அரசின் மெத்தப் போக்கினால்
***அழிவு அதிக மானதே !
வரவுக் கென்ன செய்வது
***வாட்டம் மனதை அரித்ததே
கரங்கள் நீட்டும் உதவியால்
***கண்கள் பனித்து வடிந்ததே !
மரத்துப் போன நிலையிலும்
***மனிதம் மண்ணில் பூத்ததே !
கட்டுக் கட்டாய் இருப்பினும்
***காசு செல்ல வில்லையே !
கட்டுச் சாதம் வருமெனக்
***காத்தி ருப்பும் கொடுமையே !
விட்டு வந்தப் பொருளெலாம்
***வீணாய்ப் போன வேளையில்
சுட்ட நினைவு ஆறுமோ
***சுவடாய் நெஞ்சில் பதியுமோ ??
அருமையான கவிதை!
ReplyDeleteஇனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சகோதரி!
http://www.friendshipworld2016.com/