Thursday, December 17, 2015

மழைக்கு ஒரு விண்ணப்பம் ....!!!




மழையே ! 
இன்னும் நீ பெய்தழிப்பாய் என்று 
இங்கும் அங்கும் 
தகவல்களின் உலா 
வானிலை அறிவிப்பு முதல் 
வாட்ஸ்-அப் வரை ! 

உன்னால் விளைந்த 
பாதிப்புகளால் 
உனக்கே அழுகை 
முட்டிக்கொண்டு வருகிறதோ ? 

கருணை வள்ளலே 
கண்ணீர் சிந்திவிடாதே ! 
அடக்கிக்கொண்டு 
வானவீதியில் நடமாடு ! 
அழைக்கும் போது மட்டும் வா ! 

உன்னை .... 
கண்டிக்கவில்லை 
கனிவாய்தான் சொல்கிறோம் .... 
நாங்கள் எங்களை 
ஆயத்தப்படுத்திக் கொள்ள 
அவகாசம் கொடு !

No comments:

Post a Comment