மனிதா !
நீ .....இயற்கையை சிதைத்தாய் !
நீர்நிலை வழியை அபகரித்தாய் !
தண்ணீர் தாங்கிடும் மேனியில்
அலங்கார அடுக்ககங்களும்
ஆடம்பர வீடுகளும் எழுப்பினாய் !
ஆற்றின் அபயக்குரலும் கேட்கவில்லை
அபாய அறிவிப்பும் எட்டவில்லை!
கண்ணீருடன் அவை எங்குசெல்லும் ?
நிறைந்ததும் போவதெங்கே ?...தவித்தது
பாதை தேடியே ஓடியது
தடந்தெரியாது கண்டவழியெங்கும்
புகுந்தோடியது !
நியாயம் கேட்டு இல்லக்கதவைத் தட்டியதோ ?
சீற்றங்கொண்டு சிங்காரச் சென்னையை
சீரழித்ததோ ?
மனிதா ...!
உன் பிழையைத் தட்டிக் கேட்காமல்
வாய்மூடி மௌனியாய் கற்சிலையாய்
அமர்ந்ததால் தானோ ....
பாய்ந்து வந்த வெள்ளம்
ஆலயப்பிரவேசம் செய்ததோ ?
ஆசாரமுடன் புனிதநீரால் அபிஷேகம் நடந்த எனக்கு
முழுவீச்சாய் முழுநேர நீராட்டு நடந்ததே !
சந்தனத்தில் மணந்த என்னை
சாக்கடை நீரில் நாறவிட்டது யார்பிழையோ ?
இனியேனும் .....
அதனதன் பாதையை அவற்றிற்கே விட்டிடுவீர் !
அவரவர் தேவையை அல்லலின்றி பெற்றிடுவீர் !
No comments:
Post a Comment