Saturday, December 12, 2015

கடவுளின் ஆதங்கம் ....!!

மனிதா !

நீ .....இயற்கையை சிதைத்தாய் !
நீர்நிலை வழியை அபகரித்தாய் !
தண்ணீர் தாங்கிடும் மேனியில் 
அலங்கார அடுக்ககங்களும்
ஆடம்பர வீடுகளும் எழுப்பினாய் !

ஆற்றின் அபயக்குரலும் கேட்கவில்லை 
அபாய அறிவிப்பும் எட்டவில்லை!
கண்ணீருடன் அவை எங்குசெல்லும் ?

நிறைந்ததும் போவதெங்கே ?...தவித்தது 
பாதை தேடியே ஓடியது 
தடந்தெரியாது கண்டவழியெங்கும் 
புகுந்தோடியது !

நியாயம் கேட்டு இல்லக்கதவைத் தட்டியதோ ?
சீற்றங்கொண்டு சிங்காரச் சென்னையை 
சீரழித்ததோ ?

மனிதா ...!
உன் பிழையைத் தட்டிக் கேட்காமல் 
வாய்மூடி மௌனியாய் கற்சிலையாய் 
அமர்ந்ததால் தானோ ....

பாய்ந்து வந்த வெள்ளம் 
ஆலயப்பிரவேசம் செய்ததோ ?
ஆசாரமுடன் புனிதநீரால் அபிஷேகம் நடந்த எனக்கு 
முழுவீச்சாய் முழுநேர நீராட்டு நடந்ததே !

சந்தனத்தில் மணந்த என்னை 
சாக்கடை நீரில் நாறவிட்டது யார்பிழையோ ?
இனியேனும் .....
அதனதன் பாதையை அவற்றிற்கே விட்டிடுவீர் !
அவரவர் தேவையை அல்லலின்றி பெற்றிடுவீர் !

  

No comments:

Post a Comment