Sunday, June 21, 2015

கள்ளின் போதை தந்திடுமே ....!!



ஆற்று நீரில் துள்ளும் மீன்கள் 
****ஆளைக் கண்டால் ஓடிடுமே ! 
காற்று வீசப் பூக்கள் வாசம் 
****கள்ளின் போதை தந்திடுமே ! 
சீற்றம் கொண்ட மேகம் யுத்தம் 
****செய்யும் சத்தம் கேட்டிடுமே ! 
தோற்றுப் போன தாலே வானம் 
****தூறல் கண்ணீர் சிந்திடுமே ...!!! 

No comments:

Post a Comment