Monday, June 22, 2015

மயங்கி மனம் குளிரும் ...!!!



பொதிகைத் தென்றல் தவழ்ந்து வந்து 
****பொருநை நதிசேரும் ! 
நதியி லாடும் அலைக ளெல்லாம் 
****நல்ல தமிழ்பாடும் ! 
சுதியும் கூட்டும் மீன்கள் கூட்டம் 
****சுற்றி விளையாடும் ! 
மதியும் அந்திப் பொழுதில் கண்டு 
****மயங்கி மனங்குளிரும் ...!!!

No comments:

Post a Comment