பெண்ணுன்னைப் பார்த்தேன்
****பிரமித்து நின்றேன் !
கண்பார்த்துப் பூத்தேன்
****காதலிலே வீழ்ந்தேன் !
எண்ணற்றப் பாக்கள்
****ஏக்கமுடன் யாத்தேன் !
வண்டாக உன்னை
****வட்டமிட்டு வந்தேன் !
தென்றலெனத் தவழ்ந்தாய்
****தெவிட்டாமல் இனித்தாய் !
பொன்னென்று நினைத்தேன்
****புன்னகையால் கொன்றாய் !
மின்னலென ஒளிர்ந்தாய்
****மின்வெட்டாய் மறைந்தாய் !
என்னென்று சொல்வேன்
****ஏமாற்றம் தந்தாய் !
கனிந்திட்ட நெஞ்சம்
****கசந்ததுவும் ஏனோ ?
அனிச்சமலர் போலே
****அகம்வாட லாமோ ?
இனியென்றன் வாழ்வில்
****இடம்பெண்ணுக் கில்லை !
தனிமையுடன் நாளை
****தள்ளிடுவேன் அன்பே ...!!!
****பிரமித்து நின்றேன் !
கண்பார்த்துப் பூத்தேன்
****காதலிலே வீழ்ந்தேன் !
எண்ணற்றப் பாக்கள்
****ஏக்கமுடன் யாத்தேன் !
வண்டாக உன்னை
****வட்டமிட்டு வந்தேன் !
தென்றலெனத் தவழ்ந்தாய்
****தெவிட்டாமல் இனித்தாய் !
பொன்னென்று நினைத்தேன்
****புன்னகையால் கொன்றாய் !
மின்னலென ஒளிர்ந்தாய்
****மின்வெட்டாய் மறைந்தாய் !
என்னென்று சொல்வேன்
****ஏமாற்றம் தந்தாய் !
கனிந்திட்ட நெஞ்சம்
****கசந்ததுவும் ஏனோ ?
அனிச்சமலர் போலே
****அகம்வாட லாமோ ?
இனியென்றன் வாழ்வில்
****இடம்பெண்ணுக் கில்லை !
தனிமையுடன் நாளை
****தள்ளிடுவேன் அன்பே ...!!!
No comments:
Post a Comment