Sunday, June 21, 2015

அழிப்போம் சீமைக் கருவேல மரத்தை !



சீமைக் கருவேலம் சீரழிக்கும் மண்வளத்தை 
தீமை விளைவிக்கும் தேவையின்றி - ஊமையாய் 
நின்றே உறிஞ்சும் நிலத்தடித் தண்ணீரை 
நன்றாய் துளிர்த்திடும் நஞ்சு . 

அடர்ந்து வளர்ந்திடும் ஆக்கிர மிக்கும் 
படர்ந்து செழித்துப் பரவும் - விடமாய் 
அமைந்த கொடுமுள்ளால் ஆபத்தும் நேரும் 
குமையும் மனமும் கொதித்து . 

உயிர்வளியை சொற்பமாய் உற்பத்திச் செய்யும் 
உயிரினங்கள் வாழ உதவா - பயிர்கள் 
விளையவிடா காட்டு விடத்தருவை நாமும் 
சளைக்காமல் வெட்டிடுவோம் சாய்த்து . 

மண்ணின் எதிரியை மண்ணைவிட்டேப் போக்கிட 
கண்மூடி வெட்டிக் களைந்திடுக - எண்ணிடவே 
அச்சம் விளைத்தே அபாயமளிக் கும்மரத்தை 
மிச்ச மிருக்காமல் வெட்டு .

No comments:

Post a Comment