Monday, June 15, 2015

மிதந்தாள் மங்கை ....!!



கயலாடும் ஆற்றினிலே நீந்திடவே மிகவிரும்பிக் 
கற்றாள் நீச்சல் 
பயத்தோடு பழகியவள் நாளாகப் பயம்விலகி
பாய்ந்தாள் ஆற்றில் 
சுயமாகப் பலவிதமாய் நீச்சலிலே சாதித்தாள்
சொந்த மண்ணில் 
வியந்தோரும் போற்றினரே விருதுகளும் தந்தனரே 
மிதந்தாள் மங்கை !

No comments:

Post a Comment