Sunday, June 14, 2015

பறந்தோடும் துயரம் ....!!

அதிகாலைத் துயிலெழுந்து துடிப்புடனே செயல்பட்டால் 
அயர்வு நீங்கும் 
மதிசென்று கதிர்வரவில் இருள்விலகி உள்ளத்தின் 
மயக்கம் தீரும் 
கொதிக்கின்ற இதயத்தின் கொந்தளிப்பும் விலகிவிடும் 
கோபம் மாறும்  
துதிபாடி பக்தியுடன் வேண்டிடிலோ பறந்தோடும் 
துயரம் காண்பீர் !

No comments:

Post a Comment