Friday, June 12, 2015

நீயும் நானும் யாரோ அன்று !

நீயும் நானும் யாரோ இன்று 
***நினைவில் வாழக் கற்றது நன்று 
காயும் நிலவை ரசித்தோம் சேர்ந்து 
***கடமை அழைக்கச் சென்றோம் பிரிந்து ! 

இதயம் ஒன்றாய் இணைந்தோம் அன்று 
***இன்னல் தொலைத்தோம் காதலை வென்று 
உதய வாழ்வில் ஊமை யானோம் 
***உண்மை யன்பை மனதினுள் புதைத்தோம் ! 

சூழல் உணர்ந்து விலகி னாலும் 
***சுயமாய் ஏற்கப் பழகிக் கொண்டோம் 
வாழக் கற்றோம் அவரவர் வழியே 
***வரமாய்ப் பெற்ற குணத்தால் உயர்ந்தோம் ! 

சுமையைக் கூட சுகமாய் நினைத்தோம் 
***சுவர்க்கம் நரகம் மண்ணில் கண்டோம் 
அமைந்த வாழ்க்கை அமைதியாய் ஏற்றோம் 
***அழகாய் மழலை இருவரும் பெற்றோம் ! 

பிரிவும் நிம்மை வாட்டிட வில்லை 
***பிள்ளைச் செல்வமே இன்பத்தின் எல்லை 
புரியா தவர்க்குப் புதிராய்த் தோன்றும் 
***புரிந்த மனமோ புனிதம் அறியும் ! 

பாயில் படுத்தால் நினைவுகள் வாட்டும் 
***பக்தியே மருந்தாய்க் கவலையை ஓட்டும் 
நோயில் சுருண்டு முடியும் தருணம் 
***நோக்க ஒருமுறை அனுமதிப் பாயா ....?
?

No comments:

Post a Comment