Friday, October 11, 2019

சோலை விழாவுக்கு வரவேற்பு ...!!!

சுற்றத்து டன்நட்பும் சூழ்ந்திட வாருங்கள்
சோலை விழாவினைக் காண்பதற்கு !
நற்றமிழ் அன்னையும் வந்திடு வாளங்கு
நல்ல தமிழ்ப்பாக்கள் கேட்பதற்கு !!
நான்காவ தாண்டு விழாவினில் சென்னையில்
நாமொன்று கூடி மகிழ்ந்திடலாம் !
வான்மழை யும்பன்னீர்த் தூவிட இன்புற்று
வாழ்த்தாய் நினைத்துச் சிலிர்த்திடலாம் !!
பாவலர் காட்டிய பாதையி லேநாமும்
பைந்தமிழ்ச் சோலையில் கற்றறிந்தோம் !
ஆவலுடன் பட்டம் பெற்ற பூரிப்பினில்
ஆனந்த யாழினை மீட்டிடுவோம் !!
விருதுகள் பெற்றிடும் ஆன்றோரு ரைகேட்க
விருப்பத்து டன்நாமும் காத்திருப்போம் !
விருந்தாய வர்மொழி கேட்டதிலே உள்ளம்
மிக்க நிறைந்திடப் பூத்திருப்போம் !!
ஆண்டுதோ றும்பல புதுமைக ளைச்செய்யும்
ஆசானை யும்வாழ்த்திப் பாடிடுவோம் !
மூண்டெழும் அன்பினில் மூப்பில்லா அன்னையாம்
முத்தமி ழாளை வணங்கிடுவோம் !!!
மலராக வாருங்கள் ....... மணத்தோடு வாழ்த்துங்கள் !!!

No comments:

Post a Comment