Friday, October 11, 2019

உளம்‌ நனைக்கும்....!!!

சாரல் மழையும் குளிர்ந்த காற்றும் உடல்தழுவும்!
சறுக்கி மலையில் வழியு மருவி உளம்நனைக்கும்!
ஆர வாரத் தோடு கொட்டிச் சிலிர்க்கவைக்கும்!
அடங்காத் தாகங் கொண்டு குளித்த அகமலரும்!
ஈர மேகம் கீழி றங்கி வருடிவிடும்!
இயற்கை வனப்பில் தோய்ந்த இதயம் மயங்கிவிடும்!
வாரி யணைத்து முத்தங் கொஞ்ச மனந்துடிக்கும்!
வரமாய்க் கிடைத்த வாய்ப்புக் கென்றும் நன்றிசொலும்!!!


சியாமளா ராஜசேகர் 

No comments:

Post a Comment