Thursday, October 17, 2019

வருவாயா ...??

அள்ளவள்ளக் குறையாத அமுதமென நகையுணர்வால்
உள்ளவரை மகிழ்வித்தாய் ! உள்ளத்தில் நிறைந்துவிட்டாய் !
கள்ளமிலா வுனைநினைத்தால் கண்ணீரும் பெருகுதய்யா !
பிள்ளைமொழி போலும்யாம் பிதற்றலன்றி என்செய்வோம் !!

கண்ணைவிட்டுப் போனாலும் கருத்தைவிட்டுப் போகவில்லை 
வெண்பாட்டு நிற்கவில்லை வெற்றிடமாய் விடவில்லை !
நண்பன்தான் தொடர்கின்றான் நாள்தோறும் உன்நினைவில் 
வண்ணத்தில் பாட்டெழுத வருவாயா கிரேசியண்ணா...!!!

சியாமளா ராஜசேகர் 

No comments:

Post a Comment