அள்ளவள்ளக் குறையாத அமுதமென நகையுணர்வால்
உள்ளவரை மகிழ்வித்தாய் ! உள்ளத்தில் நிறைந்துவிட்டாய் !
கள்ளமிலா வுனைநினைத்தால் கண்ணீரும் பெருகுதய்யா !
பிள்ளைமொழி போலும்யாம் பிதற்றலன்றி என்செய்வோம் !!
கண்ணைவிட்டுப் போனாலும் கருத்தைவிட்டுப் போகவில்லை
வெண்பாட்டு நிற்கவில்லை வெற்றிடமாய் விடவில்லை !
நண்பன்தான் தொடர்கின்றான் நாள்தோறும் உன்நினைவில்
வண்ணத்தில் பாட்டெழுத வருவாயா கிரேசியண்ணா...!!!
சியாமளா ராஜசேகர்
No comments:
Post a Comment