Friday, October 11, 2019

முறையோ சொல்வாய்

கதியென்று கட்டத்தை முழுதாய் நம்பிக்
காலத்தைக் கடத்துவது முறையோ சொல்வாய் !
விதியென்று மனம்நொந்து முடங்க லாமோ
வீறுகொண்டு செயலாற்றப் பழகிக் கொள்வாய் !
எதிர்நீச்சல் போட்டால்தான் வெற்றி கிட்டும்
எதற்குமச்சங் கொள்ளாமற் துணிந்து நிற்பாய் !
மதிசொல்லும் வழியினிலே நடை பயின்றால்
மதிப்போடு வாழ்ந்திடலாம் புவியில் நன்றே !!!
சியாமளா ராஜசேகர்

No comments:

Post a Comment