வண்ண நிலவவள் வானில் வலம்வர
விண்மீன்கள் சூழ்ந்து விழிசிமிட்டிப் பூரிக்க
வெண்டிரை போல்மறைத்து மேகம் விளையாட
ஒண்மை மிகுந்தாள் ஒயிலாய் வெளிப்பட்டுத்
தண்ணீருக் குள்ளே தனதுருக் கண்டதும்
கண்களில் நாணம் கனிய மலர்ந்தனள்
வெண்மதி யாளின் விளங்கு மெழிலென்னை
எண்ணிலாப் பாக்க ளியற்றப் பணித்ததே !!
No comments:
Post a Comment