நினைவெலாம் பசுமையாய்ப் பூம்பொழில் வாசமாய் நிறைந்துனை நேசிக்கிறேன் !
நித்தமும் நின்மலர்த் தாளினைப் போற்றியே கவிதைகள் வாசிக்கிறேன் !
பனையளவு பாசமும் வானளவு காதலும் கொண்டுனைப் பூசிக்கிறேன் !
பண்போடு நின்னகம் சேரவே நல்வரம் வேண்டிநான் யாசிக்கிறேன் !
உனையன்றி உள்ளத்தி லன்புசெய யாருமிலை பரிவாக வழிகாட்டவா !
உயிராக இதயத்தி னொலியாக விரலோடு யாழாக இசைமீட்டவா !
கனிவான மொழியினால் கண்ணனே கார்மேக வண்ணனே பிதற்றுகிறேன் !
கற்கண்டு சொற்கேட்டு நெஞ்சினில் களிப்பொடு மாயனே எனையாளவா !!
நித்தமும் நின்மலர்த் தாளினைப் போற்றியே கவிதைகள் வாசிக்கிறேன் !
பனையளவு பாசமும் வானளவு காதலும் கொண்டுனைப் பூசிக்கிறேன் !
பண்போடு நின்னகம் சேரவே நல்வரம் வேண்டிநான் யாசிக்கிறேன் !
உனையன்றி உள்ளத்தி லன்புசெய யாருமிலை பரிவாக வழிகாட்டவா !
உயிராக இதயத்தி னொலியாக விரலோடு யாழாக இசைமீட்டவா !
கனிவான மொழியினால் கண்ணனே கார்மேக வண்ணனே பிதற்றுகிறேன் !
கற்கண்டு சொற்கேட்டு நெஞ்சினில் களிப்பொடு மாயனே எனையாளவா !!
சியாமளா ராஜசேகர்
No comments:
Post a Comment