Thursday, July 27, 2017

மாமழை போற்றிட ....!!!

கார்மேகம் கூடிக் கனத்த இடியுடன் 
கூர்மின்னல் வெட்டிடக் கொட்டுமாம் - ஏருழவன் 
வாழ்வில் வளம்கொழிக்கும்; மண்ணில் மழைதானே 
தாழ்வின்றிக் காக்கும் தகை . 

மாமழை போற்றிட மண்ணில் பொழிந்திடும் 
நாமணக்கப் பாடுவோம் நற்றமிழில் - பாமழை 
கண்டதும் சோலை களிப்புறும்; தேமதுர  
வண்ணமும் சிந்தும் வரும் .

இறைவ னருளால் இயற்கை வரமும்
நிறைவாய்க் கிடைக்கும் நிசமாய் !- குறைவறப்
பெய்யும் மழையால் பெருகும் வளங்களால்
தொய்வின்றிப் போகும் தொழில் . 

செய்த வினைப்பயனோ சீராய் மழையின்றி 
வெய்யோனும் வாட்டிடுதல் வேதனையே! - பொய்க்காமல் 
பூமியிலே சிந்துக பொன்வானே உன்கருணை 
சாமிபோல் ஆகட்டும் தா . 

No comments:

Post a Comment