Tuesday, July 18, 2017

என் காதல் ரோசாவே .....!!!



என்காதல் ரோசாவே ஏன்தவிக்க விட்டாய் 
****ஏங்குமுளம் உன்நினைவில் எங்கேநீ சென்றாய் ?
புன்னகைத்த பைங்கிளியே பொங்குதடி உள்ளம் 
****பொலிவிழந்து போனாயோ புரியவில்லை கள்ளம் !
சென்றவிடம் சொல்லாமல் செயலிழக்கச் செய்தாய் 
****செந்தூரப் பொட்டழகே தெரிந்துமுயிர் கொய்தாய் !
மின்னுமெழில் முகங்கண்டு  மிகவுடைந்து நின்றேன் 
***மெட்டியொலி சத்தத்தில் மெய்விதிர்த்தேன் நானே  !

சியாமளா ராஜசேகர் 

No comments:

Post a Comment