Wednesday, November 4, 2015

சேய்போல மகிழ்வுதரும் சொந்தமுண்டோ ?



தாய்ப்பாடுந் தாலாட்டில் சொக்கிப் போகும் 
***தாய்மடியே குழந்தைக்குத் தூளி யாகும் ! 
பாய்போட்டுப் படுத்தாலும் பக்கம் வந்து 
***பாசமுட னணைத்தபடி யுடனே தூங்கும் ! 
சாய்ந்தாடுந் தலையாட்டிப் பொம்மை கண்டால் 
***தானாடிக் கண்ணாடி முன்னே பார்க்கும் ! 
சேய்போல மகிழ்வுதரும் சொந்த முண்டோ ? 
***செகத்தோரே சொல்வீரே சரியா வென்றே ...!!!

No comments:

Post a Comment