Thursday, November 5, 2015

வரந்தரும் விநாயகா ....!! ( பாடல் )



பல்லவி 
````````````` 
மங்களம் பொங்கிட வரந்தரும் விநாயகா 
எங்களுக் கருளவே இக்கணம் வருகவே ! 

அனுபல்லவி 
~~~~~~~~~~~~ 
திங்களும் கங்கையும் சிரசினில் சூடிய 
சங்கரன் மைந்தனே சண்முகன் சோதரா ! 

சரணம் 
```````````` 
மோதகப் பிரியனே மூஷிக வாகனா 
பாதமும் பணிந்திட பரிவுடன் காத்திடு 
சோதனை போதுமெம் சுமைகளைத் தாங்கிடு 
வேதனை நீக்கிடு விக்கின விநாயகா ! 


( விளச்சீர்களால் அமைந்த பாடல் )

No comments:

Post a Comment