Wednesday, November 4, 2015

அன்பினிலே கரைந்தேன் நானே !



சாபமெனப் பருப்புவிலை யேறிப் போக 
***சாம்பாரை மறந்திடத்தான் வேண்டு மென்றாள் ! 
கோபமுடன் தட்டோடு தூக்கி வீச 
***கூப்பாடு போட்டவளும் திட்டித் தீர்த்தாள் ! 
தீபமென ஒளிவீசும் வாழ்வில் சண்டை 
***தீராதோ எந்நாளும் தட்டுப் பாட்டால் ! 
தாபமுடன் அணைத்திடவே குளிர்ந்தாள் மெல்லத் 
***தாரத்தின் அன்பினிலே கரைந்தேன் நானே ! 




( எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் ) 
காய் காய் மா தேமா 
காய் காய் மா தேமா

No comments:

Post a Comment