Saturday, November 7, 2015

கொம்பே துணை



தள்ளாடும் வேளையில் தாங்கிட யாருமில்லா 
உள்ளத்தின் வேதனை ஓயாதோ ?- பிள்ளை
யிதயமும் கல்லோ ? யிரும்போ? கைவிட்டார்க்  
குதவிடும் கொம்பே துணை .

No comments:

Post a Comment