Wednesday, November 11, 2015

காணாமற் போனாயோ ...???



கொட்டியது வான்மழை, கோடுகளாய் மின்னலும் 
வெட்டியது, விண்ணிலிடி வேட்டுவைக்க - கட்டியே
போட்டதுபோல் காணாமற் போனாயோ வெண்ணிலவே 
பூட்டியதா ரென்றே புகல். 



பூட்டிய தாரெனப் பொன்நிலவே நீசொல்வாய் 
வாட்டி வதைத்திடுவேன் வார்த்தைகளால் ! - மீட்டுவந்து 
மீண்டு முனைவான் வெளியி லுலவவிட்டு 
ஈண்டுக் களிப்பேன் இனிது .









































No comments:

Post a Comment