Tuesday, September 29, 2015

இயற்கையோ டிணைந்தால் இதமே !



தேகம் சிலிர்த்திடும் தென்றல் தீண்டலில் 
சோகம் விலகிடும் சோர்வும் பறந்திடும் 
அலைகள் கொஞ்சிடும் ஆழியைக் கண்டால் 
தொலைந்து போகும் துயரமும் விரைவில் 
கொட்டு மருவியில் குளியல் போட 
மட்டிலா இன்பம் மனதினி லூறும் 
இயற்கையோ டிணைந்தால் இதமே 
மயங்கிய நெஞ்சமும் மகிழ்ச்சியில் பொங்குமே !!

No comments:

Post a Comment