இடையின் இடையில் மடிப்பு
குடத்துடன் அவள் நடந்து வருகையில்
இளைஞர் இதயத்தில் துடிப்பு ....!!
குடத்துடன் அவள் நடந்து வருகையில்
இளைஞர் இதயத்தில் துடிப்பு ....!!
*********************************************************************
காதல் கைகூடுமாவென சஞ்சலம்
கவலை ஏதுமின்றி காற்று தாலாட்ட
ஆடியது குழல்நுனியில் குஞ்சலம் .....!!
********************************************************************
தென்றலாய் தவழ்ந்தது தமிழ் கானம்
பொங்கிய தேனருவியில் நீராடி மகிழ்ந்து
அள்ளிப் பருகினேன் அமுத பானம் .....!!
*********************************************************************
தவற வைத்தது மோகம்
கட்டவிழ்ந்து தறிகெட்ட மனதால்
பாரமாய் அழுத்தியது சோகம் ....!!
******************************************************************
ஈர்த்தது உந்தன் பார்வை
அடித்தது விழிகலப்பில் குளிர்காய்ச்சல்
இழுத்து மூடினேன் போர்வை .....!!
No comments:
Post a Comment