Monday, September 7, 2015

மஞ்சுள மேனியளை வாழ்த்து .....!!!



சஞ்சலம் தீர்க்கும் சமய புரத்தாளை 
நெஞ்சுருக வேண்டிடில் நிம்மதி கிட்டிடும் 
தஞ்சமடைந் தால்காப்பாள் தாய் . 

மஞ்சள் முகத்தாள் மலர்ப்பதம் பற்றிடில் 
வஞ்ச மகலும் வருந்துயர் தோற்றோடும் 
பஞ்சம் விலகும் பயந்து . 

கஞ்ச மலரால் கனிவுடன் அர்ச்சிக்க 
அஞ்சே லெனவே அபய மளித்திடும் 
மஞ்சுள மேனியளை வாழ்த்து . 


வெள்ளொத் தாழிசை 
``````````````````````````````` 
சிந்தியல் வெண்பாக்கள் மூன்று சேர்ந்து ஒரே பொருளைத் தாங்கிவரின் அதனை வெள்ளொத் தாழிசை என்பர். ஒரு கருத்தை அடியொற்றி மூன்று சிந்தியல் பாக்கள் புனைதலே வெள்ளொத் தாழிசை எனவும் கொள்ளலாம்.

No comments:

Post a Comment