Monday, April 8, 2019

பிறந்தநாள் வாழ்த்துகள் ...!!!


பாவலருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ...!!!
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
ஈடிணை யற்ற இனிய தமிழ்மரபைத்
தேடிப் படித்துத் தெளிவுற்றாய் - நாடியிங்கு
வந்தோர்க் கெளிதாய் மரபைப் பயிற்றுவித்தாய் 
செந்தமிழ்ப் பெற்றது சீர் .
சீர்மிகு சோலையில் தித்திக்கும் பாவகைகள்
சோர்வின்றிக் கற்பிக்குந் தூயனே ! - வேர்விட்ட
ஆல மரமாய் அழியாப் புகழுடன்
ஞாலத்தில் சூழ்க நலம் .
நலத்துடன் தான்வாழ நற்றமி ழன்னை
நிலையெனச் சேர்ந்தாளோ நின்னை - சலியா
மனத்துடன் வாழ்கவிவ் வையத்தி லென்றும்
உனக்கவ ளாசிக ளுண்டு.
உண்டு களிப்பி லுறங்கிக் கழிக்காமல்
தொண்டுளத் தோடு தொடர்பணியைக் - கண்டவர்
யாவரும் போற்றியுனை ஏத்திடச் சித்தருடன்
தேவரும் வாழ்த்துவர் சேர்ந்து.
சியாமளா ராஜசேகர்

No comments:

Post a Comment