Sunday, December 9, 2018

தென்றல் ...!!!

நதிக்கரை யோரம் நளினமாய்க் கொஞ்சி நடைபழகும்
புதுமலர்ச் சோலையில் பூக்கள் மணத்தில் புரண்டுவரும் 
மதியொளிர் வேளை வருடி யிதமாய் மதிமயக்கும்
அதியழ காக அருவமாய் வந்தே அணைத்திடுமே !!
( கட்டளைக் கலித்துறை )
சியாமளா ராஜசேகர்

No comments:

Post a Comment