Sunday, December 9, 2018

தனிமையில் வருவாளோ ...?? ( எண்சீர் வண்ண விருத்தம் )


எண்சீர் வண்ண விருத்தம்... !!!
*****************************************
சந்தக் குழிப்பு :
********************
தனதன தத்தத் தனதன தத்தத்
தனதன தத்தத் தனதன தனதானா
பொலிவொடு பட்டுப் புடவையு டுத்திப் 
     பொடிநடை யிட்டுத் தனிமையில் வருவாளோ ?
சிலையென வெட்கப் படுமிரு சுட்டிச் 
     சிறுவிழி முத்துப் பரலென வொளிவீசும் !
தலைவியை மெச்சிக் கனிவொடு தொட்டுத் 
     தழுவிட யிற்றைக் கினியவள் விடுவாளோ ?
குலமகள் மத்தத் துடனெனை யொட்டிக் 
     குலவிட முத்தச் சுகமது புரிவேனே !!

சியாமளா ராஜசேகர் 

No comments:

Post a Comment