Saturday, April 7, 2018

இரவின் வனப்பு ...!!!


வடிவில் குறைந்து வளரும் நிலவு
***வனப்பா யிரவில் ஒளியைக் கொடுக்கும் !
விடியும் வரையில் விரிந்த விசும்பு 
விளங்கு மழகில் வியப்பை யளிக்கும் !
இடியும் முழங்கப் பொழியும் மழையில் 
***இதயம் நனைய  உவகை பிறக்கும் !
செடியில் தவழும் வளியும் வருட 
***சிலிர்த்த மனமும் அமைதி யுறுமே !!

சியாமளா ராஜசேகர் 

No comments:

Post a Comment