வளையற் சிந்து ...!!
****************************
காலையிளங் காற்றுவந்து
காதோரம் பாடும் - அது
கார்குழலைக் கோதும் - இரு
கண்ணிமைகள் மூடும் - உளம்
கனவினிலே கண்ணன்வரக்
காதலுடன் தேடும் !!
****************************
காலையிளங் காற்றுவந்து
காதோரம் பாடும் - அது
கார்குழலைக் கோதும் - இரு
கண்ணிமைகள் மூடும் - உளம்
கனவினிலே கண்ணன்வரக்
காதலுடன் தேடும் !!
மாலையென்று பூக்குமென்று
மனக்கணக்கு போடும் ! - அது
மன்னவனை நாடும் ! - நிதம்
மையலுடன் கூடும் ! - பின்
மதுவுண்ட வண்டாக
மயக்கத்திலே ஆடும் !
மனக்கணக்கு போடும் ! - அது
மன்னவனை நாடும் ! - நிதம்
மையலுடன் கூடும் ! - பின்
மதுவுண்ட வண்டாக
மயக்கத்திலே ஆடும் !
சியாமளா ராஜசேகர்
No comments:
Post a Comment