பெற்றவளைக் காப்பகத்தில் சற்றும்மன சாட்சியின்றிப்
***பிள்ளைகளே சேர்க்கும்கலி காலம் காலம் !!
உற்றதுணை யாயிருந்து நற்பண்பை ஊட்டிவிட்ட
***உத்தமியர் வாழ்வுமலங் கோலம் கோலம் !!
வேதனையில் கண்கலங்கும் மாதவளைப் பேணாமல்
***வெந்துமனம் நோகவிடல் நன்றோ நன்றோ ??
பாதகத்தைச் செய்யுமவர் பாதைநாளை மாறிடலாம்
***பண்ணியதே மீண்டும்கிட்டும் அன்றோ அன்றோ ??
சியாமளா ராஜசேகர்
No comments:
Post a Comment