Thursday, August 10, 2017

ஆடினளே ....!!!





அலைகொஞ்சி விளையாடும் நதிநீரில் நின்று
***அபிநயிக்கும் அணங்கவளின் அழகுவிழி கண்டு 
வலைதப்பி ஒளிந்தோடும் கயல்மீன்கள் வியக்க 
***வளைகரத்தில் விரல்பத்தில் மருதாணிச் சிவக்க 
மலையோர இளங்காற்றும் இதமாக வருட 
***மனம்சிலிர்க்கத் தனைமறந்து கனவுகளில் மிதந்து 
சிலைபோலும் பேரெழிலாள் காற்சதங்கை துள்ள 
***திகட்டாத இயற்கையுடன் இணைந்தாடி னாளே!
சியாமளா ராஜசேகர்

No comments:

Post a Comment