Wednesday, October 28, 2015
Tuesday, October 27, 2015
தனிமையுணர்வை மாற்றினாள் ....!!
சன்ன லோர இருக்கையில்
***சாய்ந்துக் கண்ணை மூடினாள்!
என்ன இந்த வாழ்வென
***எரிச்சல் கொண்டு வாடினாள்!
அன்புக் காட்டி மறுத்தவன்
***அமைதி பறித்துப் போகவே
சின்ன மனத்தில் வேதனை
***சிறகு விரிக்க ஏங்கினாள்!
கன்னந் தழுவும் தென்றலால்
***களைப்பு மெல்ல நீங்கினாள்!
புன்ன கையைத் தொலைத்தவள்
***புதிதாய் மூச்சு வாங்கினாள்!
தன்கை என்று முதவிடும்
***தவித்த நெஞ்சைத் தேற்றினாள்!
தன்னம் பிக்கைத் துணைவர
***தனிமை யுணர்வை மாற்றினாள்...!!!
Saturday, October 24, 2015
காதல் பாக்கள் வடிக்குது ....!!!
பட்டுக் கன்னம் தொட்டுத் தீண்டப்
***பாச நெஞ்சம் துடிக்குது !
கட்டிப் போட்ட கையி னாலே
***காதல் பாக்கள் வடிக்குது !
எட்டி நின்று பார்க்கும் கண்ணில்
***ஏக்கம் மட்டும் தெரியுது !
விட்டுச் செல்ல வுள்ள மின்றி
***வீட்டுக் குள்ளே மறையுதே !!
(எழுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் )
( தேமா தேமா தேமா தேமா
தேமா தேமா விளம் )
***பாச நெஞ்சம் துடிக்குது !
கட்டிப் போட்ட கையி னாலே
***காதல் பாக்கள் வடிக்குது !
எட்டி நின்று பார்க்கும் கண்ணில்
***ஏக்கம் மட்டும் தெரியுது !
விட்டுச் செல்ல வுள்ள மின்றி
***வீட்டுக் குள்ளே மறையுதே !!
(எழுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் )
( தேமா தேமா தேமா தேமா
தேமா தேமா விளம் )
Tuesday, October 20, 2015
Thursday, October 15, 2015
Wednesday, October 14, 2015
நீங்கா திருப்பாய் நிறைந்து .....!!! ( அந்தாதி வெண்பாக்கள் )
கருணை விழியால் கனிவுடன் நோக்கி
வருந்துயர் போக்குவாள் மாரி !- விரும்பி
வணங்கு மடியவர் வாழ்வி னொளியாய்
இணங்கி யருள்வாள் இனிது .
இனியவள் காட்டிடும் ஈடிலா அன்பில்
பனித்திடும் கண்கள் பரிவாய் !- செனித்த
பிறவியில் தாயவள் பேரருள் கிட்ட
சிறந்திடும் வாழ்வும் தெளிந்து .
தெளிந்த அறிவுடன் தேவியை எண்ண
எளிதாய் வருவாள் இறங்கி ! - ஒளிரும்
சுடரிலும் தோன்றியே சூலினி காப்பாள்
இடர்வரின் சிட்டாய் எழுந்து .
எழுந்தோடி வந்தாய் எளியேனைக் காக்க
தொழுதவென் துன்பம் தொலைத்தாய் ! - விழுதாகத்
தாங்கினாய்த் தாயே! தயாபரியே! என்றென்றும்
நீங்கா திருப்பாய் நிறைந்து .
Subscribe to:
Posts (Atom)