Monday, June 18, 2018

பூத்திடும் வனமாகும்...!!!



பூச்சரமவள் கார்க்குழலினில் காற்றொடுகலைந் தாடும்
***பூக்களின்மண மீர்த்திடுமவன் மூச்சுடனுற வாடும் !
பாக்களின்சுவை கூட்டிடும்சுகம் பாற்கடலலை போலும்
***பாட்டெழுதிட ஊற்றெனவரும் வார்த்தைகளலை மோதும் !
கீச்சிடுமொழி கேட்டதும்செவி பேச்சினிமையில் சொக்கும்
***கீற்றசைந்திட ஆட்டியவளி பூப்பனித்துளி சொட்டும் !
வீச்சொடுவிழும் காட்டருவியின் கூச்சலுமிசை யாகும் 
***வேட்கையில்குழல் மீட்டிடவுளம் பூத்திடுவன மாகும் !!
சியாமளா ராஜசேகர்

No comments:

Post a Comment