மந்தியொடு வானரமும் மரக்கிளையில் தாவும்
***மலையருவிச் சாரலிலே மனம்சிலிர்த்துச் சேரும்
அந்திமழை மேகங்க ளலையலையாய்க் கூடும்
***அதுகண்டு தோகைவிரித் தழகுமயி லாடும்
சந்தமொடு குதித்தோடும் கவின்நதியின் கோலம்
***சாமத்திலும் செவியுரசிச் செல்லுமதன் ஓலம்
செவ்வந்தி மலர்போலும் சிரித்தபடி வானில்
***சிங்கார வெண்மதியும் திருக்காட்சி தந்தாள் ...!!!
***மலையருவிச் சாரலிலே மனம்சிலிர்த்துச் சேரும்
அந்திமழை மேகங்க ளலையலையாய்க் கூடும்
***அதுகண்டு தோகைவிரித் தழகுமயி லாடும்
சந்தமொடு குதித்தோடும் கவின்நதியின் கோலம்
***சாமத்திலும் செவியுரசிச் செல்லுமதன் ஓலம்
செவ்வந்தி மலர்போலும் சிரித்தபடி வானில்
***சிங்கார வெண்மதியும் திருக்காட்சி தந்தாள் ...!!!
சியாமளா ராஜசேகர்
No comments:
Post a Comment