கலைத்தாயின் தவப்புதல்வன் கலையுலகின் சிம்மமவன்
மலைக்கவைக்கும் ஆற்றலுடன் மனங்கவர்ந்த கள்வனவன்
தலைசிறந்த நடிப்பாலே தமிழருளம் இடம்பிடித்தோன்
நிலைத்திருக்கு மவன்புகழும் நிலம்வானும் உள்ளவரை !
மலைக்கவைக்கும் ஆற்றலுடன் மனங்கவர்ந்த கள்வனவன்
தலைசிறந்த நடிப்பாலே தமிழருளம் இடம்பிடித்தோன்
நிலைத்திருக்கு மவன்புகழும் நிலம்வானும் உள்ளவரை !
விடிவெள்ளி திரைவானில்! வியக்கவைக்கும் கலைச்செல்வம்!
நடிப்புக்கே நடிப்புதனை நயமாகக் கற்பித்து
நடிப்பாலே உளம்கொய்த நாயகனின் உணர்ச்சிமிகு
துடிப்பான உச்சரிப்பில் சொக்காதோர் யாருமுண்டோ ? .
நடிப்புக்கே நடிப்புதனை நயமாகக் கற்பித்து
நடிப்பாலே உளம்கொய்த நாயகனின் உணர்ச்சிமிகு
துடிப்பான உச்சரிப்பில் சொக்காதோர் யாருமுண்டோ ? .
தரமான நடிப்பாலே தானேற்ற பாத்திரமாய்
வரம்பெற்றுப் பிறர்மனத்தில் வாழ்ந்திருக்கும் இமயமவன்!
வரலாற்று மன்னரையும் மனக்கண்முன் நிறுத்தியவன்
குரலாலே உயிரூட்டிக் கொள்ளையுள்ளம் கொண்டவனே!
வரம்பெற்றுப் பிறர்மனத்தில் வாழ்ந்திருக்கும் இமயமவன்!
வரலாற்று மன்னரையும் மனக்கண்முன் நிறுத்தியவன்
குரலாலே உயிரூட்டிக் கொள்ளையுள்ளம் கொண்டவனே!
அங்கங்கள் ஒவ்வொன்றும் அழகாகத் தான்பேசும்
பொங்கிவரும் உணர்ச்சிவெள்ளம் புதுப்புனலாய்ப் பெருக்கெடுக்கும் !
செங்குருதி யும்நடிக்கும் சீற்றத்தில் துடிக்கையிலே
சிங்கநடை தோற்றுவிடும் சிவாஜிநடை பயில்கையிலே !
பொங்கிவரும் உணர்ச்சிவெள்ளம் புதுப்புனலாய்ப் பெருக்கெடுக்கும் !
செங்குருதி யும்நடிக்கும் சீற்றத்தில் துடிக்கையிலே
சிங்கநடை தோற்றுவிடும் சிவாஜிநடை பயில்கையிலே !
வற்றாத கலைஞானம் வாகான முகபாவம்
பற்றோடு செய்தொழிலில் பயபக்தி யுடன்நேசம்
சற்றேனும் செருக்கில்லாத் தகைசான்ற குணசீலம்
பெற்றோனைப் பெற்றதற்குப் பெரும்பேறு பெற்றோமே !
பற்றோடு செய்தொழிலில் பயபக்தி யுடன்நேசம்
சற்றேனும் செருக்கில்லாத் தகைசான்ற குணசீலம்
பெற்றோனைப் பெற்றதற்குப் பெரும்பேறு பெற்றோமே !
செம்மாந்த தமிழ்பேசித் தெளிவாக வசனங்கள்
கம்பீர மாய்முழங்கி காந்தமெனக் கவர்ந்திழுத்துச்
சிம்மாச னம்போட்டுச் சிங்கார மாய்வீற்ற
நம்நடிகர் திலகத்தை நற்றமிழில் வாழ்த்துவமே !!
கம்பீர மாய்முழங்கி காந்தமெனக் கவர்ந்திழுத்துச்
சிம்மாச னம்போட்டுச் சிங்கார மாய்வீற்ற
நம்நடிகர் திலகத்தை நற்றமிழில் வாழ்த்துவமே !!
சியாமளா ராஜசேகர்
No comments:
Post a Comment