Monday, June 18, 2018

நகர்ந்தோடினாரே ....!!!



மலர்களெல்லாம் ஒன்றுகூடி மாநாடு போட்டு
***வரமொன்று சாமியிடம் வாங்குதற்குச் செல்ல
சிலையினின்று வெளிப்பட்டுச் சேதியென்ன வென்றே
***சிரித்தபடி யவர்கேட்க, சிந்தினவாம் கண்ணீர் !
நிலத்திலெங்கள் வாழ்வெல்லாம் நாளொன்று தானே 
***நீடித்துத் தருவீரோ என்றவையும் கேட்க
நலமுடனே சேர்ந்திடுவீர் என்பாத மென்றே
***நயமாகச் சொல்லிவிட்டு நகர்ந்தோடி னாரே !!
சியாமளா ராஜசேகர்

No comments:

Post a Comment