Monday, August 31, 2015
வெண்மதியே கண்வளராய் ....!!! ( பதினான்கு மண்டில வெண்பா )
1)விண்ணுலவும் தண்ணொளியாள் வெண்மதியே கண்வளராய்
வெண்கவியில் வெண்டளையால் செண்ணிடுவேன் - பெண்ணவளின்
வண்ணமதை எண்ணிடிலோ மண்மகளும் கண்குளிர்வாள்
கொண்டலதும் நண்ணிடு தே .
2)தண்ணொளியாள் வெண்மதியே கண்வளராய் வெண்கவியில்
வெண்டளையால் செண்ணிடுவேன் பெண்ணவளின் - வண்ணமதை
எண்ணிடிலோ மண்மகளும் கண்குளிர்வாள் கொண்டலதும்
நண்ணிடுதே விண்ணுல வும் .
3)வெண்மதியே கண்வளராய் வெண்கவியில் வெண்டளையால்
செண்ணிடுவேன் பெண்ணவளின் வண்ணமதை - எண்ணிடிலோ
மண்மகளும் கண்குளிர்வாள் கொண்டலதும் நண்ணிடுதே
விண்ணுலவும் தண்ணொளி யாள் .
4)கண்வளராய் வெண்கவியில் வெண்டளையால் செண்ணிடுவேன்
பெண்ணவளின் வண்ணமதை எண்ணிடிலோ - மண்மகளும்
கண்குளிர்வாள் கொண்டலதும் நண்ணிடுதே விண்ணுலவும்
தண்ணளியாள் வெண்மதி யே !
5)வெண்கவியில் வெண்டளையால் செண்ணிடுவேன் பெண்ணவளின்
வண்ணமதை எண்ணிடிலோ மண்மகளும் - கண்குளிர்வாள்
கொண்டலதும் நண்ணிடுதே விண்ணுலவும் தண்ணளியாள்
வெண்மதியே கண்வள ராய் .
6)வெண்டளையால் செண்ணிடுவேன் பெண்ணவளின் வண்ணமதை
எண்ணிடிலோ மண்மகளும் கண்குளிர்வாள் - கொண்டலதும்
நண்ணிடுதே விண்ணுலவும் தண்ணளியாள் வெண்மதியே
கண்வளராய் வெண்கவி யில்
7)செண்ணிடுவேன் பெண்ணவளின் வண்ணமதை எண்ணிடிலோ
மண்மகளும் கண்குளிர்வாள் கொண்டலதும் - நண்ணிடுதே
விண்ணுலவும் தண்ணொளியாள் வெண்மதியே கண்வளராய்
வெண்கவியில் வெண்டளை யால் .
8)பெண்ணவளின் வண்ணமதை எண்ணிடிலோ மண்மகளும்
கண்குளிர்வாள் கொண்டலதும் நண்ணிடுதே - விண்ணுலவும்
தண்ணொளியாள் வெண்மதியே கண்வளராய் வெண்கவியில்
வெண்டளையால் செண்ணிடு வேன் .
9)வண்ணமதை எண்ணிடிலோ மண்மகளும் கண்குளிர்வாள்
கொண்டலதும் நண்ணிடுதே விண்ணுலவும் - தண்ணொளியாள்
வெண்மதியே கண்வளராய் வெண்கவியில் வெண்டளையால்
செண்ணிடுவேன் பெண்ணவ ளின் .
10)எண்ணிடிலோ மண்மகளும் கண்குளிர்வாள் கொண்டலதும்
நண்ணிடுதே விண்ணுலவும் தண்ணொளியாள் - வெண்மதியே
கண்வளராய் வெண்கவியில் வெண்டளையால் செண்ணிடுவேன்
பெண்ணவளின் வண்ணம் அதை .
11)மண்மகளும் கண்குளிர்வாள் கொண்டலதும் நண்ணிடுதே
விண்ணுலவும் தண்ணொளியாள் வெண்மதியே - கண்வளராய்
வெண்கவியில் வெண்டளையால் செண்ணிடுவேன் பெண்ணவளின்
வண்ணமதை எண்ணிடி லோ .
12)கண்குளிர்வாள் கொண்டலதும் நண்ணிடுதே விண்ணுலவும்
தண்ணொளியாள் வெண்மதியே கண்வளராய் - வெண்கவியில்
வெண்டளையால் செண்ணிடுவேன் பெண்ணவளின் வண்ணமதை
எண்ணிடிலோ மண்மக ளும் .
13)கொண்டலதும் நண்ணிடுதே விண்ணுலவும் தண்ணொளியாள்
வெண்மதியே கண்வளராய் வெண்கவியில் - வெண்டளையால்
செண்ணிடுவேன் பெண்ணவளின் வண்ணமதை எண்ணிடிலோ
மண்மகளும் கண்குளிர் வாள் .
14)நண்ணிடுதே விண்ணுலவும் தண்ணொளியாள் வெண்மதியே
கண்வளராய் வெண்கவியில் வெண்டளையால் - செண்ணிடுவேன்
பெண்ணவளின் வண்ணமதை எண்ணிடிலோ மண்மகளும்
கண்குளிர்வாள் கொண்டல் அது .
இலக்கணக் குறிப்பு
```````````````````````````````
பதினான்கு மண்டிலம் என்பது முதல் வெண்பாவின் முதல் சீர், இரண்டாம் வெண்பாவில் இறுதியாக வரும். இரண்டாம் சீர் முதல் சீராக வரும். இப்படியாகப் பதினான்குச் சீர்களும் முதல் சீராக வந்தமையப் பாடுவது. முதல் வெண்பாவில் உள்ள சீர்களைப் போன்றே, எழுத்துகளும் அனைத்து வெண்பாவில் வரவேண்டும். வல்லினம் மிகும் சொற்கள் இம்மண்டிலத்தில் வாரா!
```````````````````````````````
பதினான்கு மண்டிலம் என்பது முதல் வெண்பாவின் முதல் சீர், இரண்டாம் வெண்பாவில் இறுதியாக வரும். இரண்டாம் சீர் முதல் சீராக வரும். இப்படியாகப் பதினான்குச் சீர்களும் முதல் சீராக வந்தமையப் பாடுவது. முதல் வெண்பாவில் உள்ள சீர்களைப் போன்றே, எழுத்துகளும் அனைத்து வெண்பாவில் வரவேண்டும். வல்லினம் மிகும் சொற்கள் இம்மண்டிலத்தில் வாரா!
Tuesday, August 25, 2015
Monday, August 17, 2015
மும்மண்டில வெண்பா - ( 4 )
செவ்விதழ் முத்தத்தில் செங்கரும்பின் இன்சுவையும்
கொவ்வையின் தித்திப்பும் மங்கிடும் - அவ்விதமே
பித்தாக்கும் பொங்கிவரும் புன்சிரிப்பும் நெஞ்சள்ளும்
புத்தழகில் அங்கமெங்கும் பொன் .
முத்தத்தில் செங்கரும்பின் இன்சுவையும் கொவ்வையின்
தித்திப்பும் மங்கிடும் அவ்விதமே -பித்தாக்கும்
பொங்கிவரும் புன்சிரிப்பும் நெஞ்சள்ளும் புத்தழகில்
அங்கமெங்கும் பொன்செவ்வி தழ் .
செங்கரும்பின் இன்சுவையும் கொவ்வையின் தித்திப்பும்
மங்கிடும் அவ்விதமே பித்தாக்கும் -பொங்கிவரும்
புன்சிரிப்பும் நெஞ்சள்ளும் புத்தழகில் அங்கமெங்கும்
பொன்செவ்வி தழ்முத்தத் தில்
இலக்கண விளக்கம்
````````````````````````````````
மும்மண்டில வெண்பா என்பது அப்பாடலின் இரண்டாம் மூன்றாம் சீர்களை முதல் சீராக வைத்து வெண்பாவை மாற்றி எழுதினாலும் வெண்பா இலக்கணம் கெடாமல் இருக்கும் செய்யுள்!
கொவ்வையின் தித்திப்பும் மங்கிடும் - அவ்விதமே
பித்தாக்கும் பொங்கிவரும் புன்சிரிப்பும் நெஞ்சள்ளும்
புத்தழகில் அங்கமெங்கும் பொன் .
முத்தத்தில் செங்கரும்பின் இன்சுவையும் கொவ்வையின்
தித்திப்பும் மங்கிடும் அவ்விதமே -பித்தாக்கும்
பொங்கிவரும் புன்சிரிப்பும் நெஞ்சள்ளும் புத்தழகில்
அங்கமெங்கும் பொன்செவ்வி தழ் .
செங்கரும்பின் இன்சுவையும் கொவ்வையின் தித்திப்பும்
மங்கிடும் அவ்விதமே பித்தாக்கும் -பொங்கிவரும்
புன்சிரிப்பும் நெஞ்சள்ளும் புத்தழகில் அங்கமெங்கும்
பொன்செவ்வி தழ்முத்தத் தில்
இலக்கண விளக்கம்
````````````````````````````````
மும்மண்டில வெண்பா என்பது அப்பாடலின் இரண்டாம் மூன்றாம் சீர்களை முதல் சீராக வைத்து வெண்பாவை மாற்றி எழுதினாலும் வெண்பா இலக்கணம் கெடாமல் இருக்கும் செய்யுள்!
Subscribe to:
Posts (Atom)