Saturday, March 30, 2019

வண்ணப் பாடல் ....!!!


வண்ணப்பாடல்...
சந்தக் குழிப்பு :
**************
தனத்த தானன தானன தானன
தத்தத் தனதன தந்தன தந்தன
தனதன தனதன தனதன தனதன.  . . . . .  தனதானா


கிழக்கி லேயெழு ஞாயிறு  பேரொளி 
   வட்டத் தினையிரு கண்களு முண்டது
     கிடுகிடு கிடுவென இருளது விலகிடு . . . . மதிகாலை !
கிறுக்கி னேனொரு பாடலை யாவலில்
     ஒற்றைக் கதிரதை நெஞ்சமும் வென்றது 
     கிளுகிளு கிளுவென எழுதிய கவிதையு . . . . மிதுதானே !
செழித்த சோலையி லேதிகழ்  வாவியில் 
     மெத்தக் கனிவோடு கெண்டையி ரண்டுடன்
     சிறுகயல் மலரொடு குலவிடு மழகினில் . . . . . நனைவேனே 
தெறித்து நீரலை மேனியி லேபட 
      முத்துச் சரமென நெஞ்சில்வ ழிந்ததன் 
       திகழொளி விழிகளி னிமைகளை வருடிடு . . . . . மிதமாமே !
வழக்க மாயிது தான்நித மேகிடும்
     சுற்றிக் குளமதில் வண்டுப றந்திடும் 
     மழைவரு பொழுதினில் மலரித ழடியினை . . . . . யதுநாடும் !
வருத்த மேயிலை யோவெனும் பார்வையில் 
      வெட்கப் படுமலர் கண்டுநெ கிழ்ந்திடும் 
      மதுவுண மொகுமொகு மொகுவென வொலிசெயும் . . . . . வடிவோடே !

உழைக்கு மேருழ வோரது காளைகள்
     பட்டிக் கதவுதி றந்திட வந்திடும் 
     ஒலியது கலகல கலவென  விருசெவி . . . . . களில்மோதும்
உளத்தில் லோடிடு மாவலி மாறிட
      நத்தத் துடனவர் சென்றுதொ டர்ந்திட 
      உழவரி னுயர்தொழி லிதுவென மனமது . . . . மகிழாதோ ?

சியாமளா ராஜசேகர் 

No comments:

Post a Comment